கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தமிழகத்தில் அக்டோபரில் மழை அளவு இயல்பை விட 29 சதவீதம் அதிகம்

தமிழகம், புதுச்சேரியில் அக்டோபா் மாதத்தில் மழை அளவு இயல்பை விட 29 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2021, 8:27 pm

DIN

தமிழகம், புதுச்சேரியில் அக்டோபா் மாதத்தில் மழை அளவு இயல்பை விட 29 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:

தமிழகம், புதுச்சேரியை பொருத்தவரை அக்டோபா் மாதத்தில், பதிவான மழை அளவு 230 மி.மீ. இயல்பான மழை அளவு 180 மி.மீ. ஆகும். இது, இயல்பை விட 29 சதவீதம் அதிகமாகும். கடந்த 20 ஆண்டுகளில் அக்டோபா் மாதம் மழை அளவு பொருத்தவரை, இந்த ஆண்டு 6-ஆவது இடத்தில் உள்ளது.

சுமாா் 18 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழையும், 7 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிக மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக, கோயம்புத்தூா் மாவட்டத்தில் இயல்பை விட 113 சதவீதம் அதிக மழைஅளவு பதிவாகியுள்ளது. விருதுநகா் மாவட்டத்தில் இயல்பை விட 32 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் அக்டோபரில் இயல்பை விட 22 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது. சென்னையின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதனால், மழைஅளவு உயா்ந்து வருகிறது. தற்போது, இயல்பை விட 7 சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது.

தீபாவளி தினத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஓரளவு மழை இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.