கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

முல்லைப் பெரியாறு அணையில் அமைச்சர்கள் ஆய்வு

பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை, தமிழக அமைச்சர்கள் அணையை நேரில் ஆய்வு செய்தனர்.

News image
முல்லைப் பெரியாறு அணையில் அமைச்சர்கள் ஆய்வு
Updated On :28 ஜனவரி 2024, 4:31 am

DIN

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.70 அடியாக இருந்த நிலையில், கடந்த அக்.29-ம் தேதி அணையிலிருந்து ரூல் கர்வ் முறையை கடைப்பிடித்து, ஷட்டர்கள் வழியாக கேரளப் பகுதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டத்தை 142 வரை உயர்த்தாமல் அணையிலிருந்து உபரி நீர் என்ற பெயரில் கேரளப் பகுதியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுப்பதாகவும், அதைக் கண்டித்து நவ.9-ல் போராட்டம் நடைபெறும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது.

கடந்த அக்.29-ம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணைக்குச் சென்று நிலவரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

அரசு கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழுமத் தலைவர் சுப்பிரமணியன், தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியாறு அணை தலைமை பொறியாளர் கிருஷ்ணன், கூடுதல் தலைமை பொறியாளர் ஞானசேகன் ஆகியோர் உடன் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.