கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.
மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

திண்டுக்கல்லில் இந்த மாதம் 26, 27, 28 -ஆகிய தேதிகளில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள கழகம் சார்பில் 14, 16, 18, 20 வயதுக்குள்பட்ட தடகள போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.

இந்தப் போட்டியை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தொடங்கிவைத்தார். கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், காவேரிபட்டிணம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்று தகுதி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com