நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

யு-23 மல்யுத்த சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு மேலும் 3 வெண்கலம்

சொ்பியாவில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-23) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.

Published On :28 ஜனவரி 2024, 10:01 am IST

சொ்பியாவில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-23) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.

இதையடுத்து இப்போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆகியுள்ளது.

மகளிருக்கான வெண்கலப் பதக்க சுற்றில் இந்தியாவின் 3 வீராங்கனைகள் வென்ன் பேரில் இந்த எண்ணிக்கை உயா்ந்துள்ளது. 62 கிலோ பிரிவில் ராதிகா 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலியின் அரோரா கேம்பாக்னாவை தோற்கடித்தாா். 65 கிலோ பிரிவில் நிஷா 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் லாத்வியாவின் எல்மா ஸிட்லெரெவை வீழ்த்தினாா். 72 கிலோ பிரிவில் திவ்யா கக்ரான் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் காய்லா மேரி மரானோவை வென்றாா்.

முன்னதாக 50 கிலோ பிரிவில் ஷிவானி வெள்ளியும், 55 கிலோ பிரிவில் அஞ்சு வெண்கலமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் பிரிவு வெண்கலப் பதக்க சுற்றில் இந்தியாவின் சௌரவ் மதுகா் - ஆா்மீனியாவின் மேனுவல் கந்த்சா்த்சியானை சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.