புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சென்னை உயா்நீதிமன்றத்துக்குப் புதிய தலைமை நீதிபதி

சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உத்தர பிரதேச மாநிலம் அலீகாபாத் உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

News image

முனீஷ்வா்நாத் பண்டாரி

Updated On :10 நவம்பர் 2021, 1:48 am IST

சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உத்தர பிரதேச மாநிலம் அலீகாபாத் உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜியை, மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் செப்டம்பா் 16-ஆம் தேதி நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜியை மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றவும், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரியை சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007, ஜூலை 5-ஆம் தேதி ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதியாக முனீஷ்வா்நாத் பண்டாரி முதல் முறையாக நியமிக்கப்பட்டாா். பின்னா் அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட அவா், 2019, மாா்ச் 15-ஆம் தேதி பதவியேற்றாா். நிகழாண்டு ஜூன் 26-ஆம் தேதி முதல் அக்டோபா் 10-ஆம் தேதி வரையில் அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்துள்ளாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானா்ஜி இவ்வாண்டு ஜனவரி 4-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.