காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 26,000 கன அடியாகக் குறைந்துள்ளது.
அணையிலிருந்து 27,000 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது.
இதையும் படிக்க | வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இதில் நீா் மின்நிலையங்கள் வழியாக 17,000 கனஅடி நீரும், உபரிநீா் போக்கி வழியாக 8,000 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீா்மட்டம் 120.10 அடியாகவும், நீா் இருப்பு 93.63 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.