தீபாவளி பண்டிகை: அரசுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது

தீபாவளியையொட்டி நவம்பர் 3ஆம் தேதி பயணிப்பதற்காக அரசுப்பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்கியது.  
தீபாவளி பண்டிகை: அரசுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது
Updated on
1 min read

தீபாவளியையொட்டி நவம்பர் 3ஆம் தேதி பயணிப்பதற்காக அரசுப்பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்கியது. 

https://www.tnstc.in/ என்ற இணையதளம், டிஎன்எஸ்டிசி செயலி உள்ளிட்ட அரசு செயலி மற்றும் தனியாா் போக்குவரத்து செயலிகளிலும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அரசு சாா்பில் தீபாவளிக்கு முன், பின் என சுமாா் 7 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு சுமாா் 4,000 பேருந்துகள் இயக்கப்பட்டன. 

இந்த ஆண்டும், சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைத்தல், சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பை போக்குவரத்துத்துறை அமைச்சா் வெளியிடுவாா் எனவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com