புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை இப்போதைக்கு நடத்தப்போவது இல்லை என உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. 
புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை இப்போதைக்கு நடத்தப்போவது இல்லை என உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை இப்போதைக்கு நடத்தப்போவது இல்லை என புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்தது. இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்.7ஆம் தேதிக்கு ஒத்திவைக்க அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கட்டது. 

குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும், அதுவரை வேட்புமனுக்கள் பெறுவதை தள்ளிவைக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com