நெருங்கும் தீபாவளி: புதிய இனிப்பு வகைகளை அறிமுகம் செய்யும் ஆவின்

தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகளைக் குறைந்த விலைக்கு ஆவின் அறிமுகம் செய்யவிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகளைக் குறைந்த விலைக்கு ஆவின் அறிமுகம் செய்யவிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனம் வியாபார நோக்கமின்றி பொதுமக்களுக்கு சேவை செய்யும் உணர்வோடு செயலாற்றி வருகிறது  என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவைமிகுந்த சிறப்பு இனிப்புகளான

1) காஜூ கட்லீ (250 கி) -ரூ.225.00
2) நட்டி மில்க் கேக் (250 கி) -ரூ.210.00
3) மோத்தி பாக் (250 கி) -ரூ.170.00,
4) காஜு பிஸ்தா ரோல்(250 கி)-ரூ.275.00
5) காபி மில்க் பர்பி (250 கி) -ரூ.210.00
மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு (500 கிராம்) -ரூ.425.00 ஆகிய தீபாவளி சிறப்பு இனிப்புகளை அறிமுகம் செய்து விற்பனையை தொடக்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைய தினம் நம்முடைய ஆவின் நிறுவனத்தின் சார்பில் நாம் பயன்பாட்டிற்கு போக மீதம் இருக்கின்ற பாலை உபபொருட்களாக மாற்றி இது போன்ற பண்டிகை காலங்களில் பொது மக்களுக்கு சேவை செய்கின்ற உணர்வோடு, வியாபார நோக்கமின்றி பொது நோக்கோடு, இது போன்ற உபபொருட்கள் தயாரித்து அதை மக்களுடைய பயன்பாட்டிற்கு தர வேண்டும் என்ற கொள்கை உணர்வோடு இது ஒரு தொழில் முறை என்றாலும் முழுக்க முழுக்க மக்களுக்காக பொது நோக்கோடு செய்துவருகின்றோம்.

கடந்த ஆண்டு இனிப்பு வகைகளில் 15 டன் விற்பனை செய்திருக்கின்றோம்1.2 கோடி இதன் மூலம் கடந்த ஆண்டு லாபம் கிடைத்தது. இந்த ஆண்டு அதிக விற்பனை என்ற நோக்கத்தோடு 25 டன் இலக்கை நாம் வைத்திருக்கின்றோம். 2.2 கோடிக்கு இதை உயர்த்தவும் அதற்கான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் விற்பனையை அதிகரிக்கவும் மற்றம் அண்டை மாநிலங்களில், அதே போன்று அண்டை நாடுகளுக்கும் நாம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்த நாடுகளுக்கும் இந்த பொருட்களையெல்லாம் விற்பனை செய்ய துரிதமாக நடவடிகக் எடுக்கப்பட்டுவருகிறது.

தனியார் பால் கொள்முதல் விலை ரூ.25 முதல் ரூ.28 வரை எந்த அளவுக்கு வாங்க முடியுமோ அந்த அளவுக்கு வாங்குகின்றனர். ஆனால் நம்மை பொருத்தவரை லிட்டருக்கு ரூ.32க்கு வாங்குகிறோம். லிட்டருக்கு ரூ.32க்கு வாங்குவதை 12 லிட்டர் பாலை பிராசஸ் செய்தால் தான் 1 கிலோ பால் பவுடர் கிடைக்கும். அதில் கூடுதலாக ஒரு லாபம் என்னவென்றால் 140 ரூபாய்க்கு வெண்ணெய் கிடைக்கும். நமக்கு ஏற்படக்கூடிய நட்டம் 34 ரூபாய். அவையின்றி பிராசஸிங் காஸ்டு சேர்த்தால் மொத்தமாக ரூ.40 நட்டம். இருந்தாலும், உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் கரோனா காலமாக இருந்தாலும் தன்னைத்தானே வருத்திக்கொண்டு வெயில் மழை பார்க்காமல் அந்த கால்நடைகளையும் பராமரித்துக்கொண்டும், விவசாய குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த கால்நடைகளை பராமரித்துக் கொண்டும். பாலையும் கறந்து அந்த பாலை மக்களுக்கு சேரவேண்டும் என்று உழைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா காலத்தில் தனியார் நிறுவனங்கள் ரூ. 25 க்கு கொள்முதல் செய்தபோது நாங்கள் விவசாயிகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக முதலமைச்சரின் கட்டளைக்கினங்க நாங்கள் வீடுகளுக்கே சென்று ரூ.32 க்கு கொள்முதல் செய்தது மட்டுமின்றி அதை பிராசஸிங் செய்து பொது மக்களுக்கு தங்குதடையின்றி கொடுத்த ஒரே நிறுவனம் ஆவின் நிருவனம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை, அரசு கூடுதல் தலைமை செயலாலர் தென்காசி சு.ஜவஹர் பேசுகையில், தமிழ் மக்களுக்கும் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், நல்ல தரமான பால் மற்றும் பால் பொருள்களை விநியோகம் செய்வதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். அந்தவகையில் இன்றைக்கு தீபாவளி இனிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். வருங்காலங்களில் இதே போன்று ஆவினில் பல முன்னேற்றமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆவின் மேலாண்மை இயக்குநர் கந்தசாமி பேசுகையில் இந்த முறை ஆவின் மூலமாக விற்பனை செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் சில மாற்றத்துடன் அதிக நுகர்வோர்களை சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை செய்து நாம் இன்று இந்த இனிப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். குறைந்தது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் கூடுதல் விற்பனை செய்வதற்கான இலக்கை இந்த ஆண்டு கையாண்டுக்கொண்டு இருக்கின்றோம்.

பால்வளத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் படி, எப்படி ஆவின் நிர்வாகம் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு மாதா மாதம் சம்பளம் சென்றடைகிறதோ, அதே போன்று விவசாயிகளுக்கு பால் பணத்தை பட்டுவாடா செய்ய அமைச்சர் தலைமையில் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்று பல்வேறு முயற்சிகளின் நிர்வாக சீர்த்திருத்தமாக இருக்கட்டும் , பொருளாதார சீர்த்திருத்தமாக இருக்கட்டும் எங்களுக்கு வழிகாட்டி எங்களையெல்லாம் அரவணைபோடு நடத்தி செல்லும் முதல்வருக்கும் அமைச்சருக்கும் ஆவின் நிர்வாகத்தில் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com