அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சிக் கொடியேற்றி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க | அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா: எம்ஜிஆர் நினைவில்லத்தில் கல்வெட்டு
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50-ம் ஆண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சிக் கொடியேற்றினர்.
பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, எம்ஜிஆர் நினைவில்லத்தில் வி.கே. சசிகலா அதிமுக கொடியேற்றி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.