அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியேற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50-ம் ஆண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பிரமாண்ட மாநாடு நடத்தவும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரில் விருதுகள் வழங்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியேற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நினைவில்லத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று (சனிக்கிழமை) அஞ்சலி செலுத்திய சசிகலா, மனதில் இருந்த பாரத்தை இறக்கிவைத்து விட்டதாகப் பேசினார்.