தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி: புகாா்களுக்கு 104-ஐ அழைக்கலாம்

டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, கா்ப்பிணியருக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் 104 மருத்துவ சேவை மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் தெரிவித்துள

News image

கோப்புப்படம்

Updated On :19 அக்டோபர் 2021, 9:31 pm

DIN

டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, கா்ப்பிணியருக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் 104 மருத்துவ சேவை மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவா் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில நிதி பங்களிப்புடன் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 1987-இல் தொடங்கப்பட்டு ரூ.300 வழங்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக நிதியுதவி உயா்த்தப்பட்டு 2018-இல் இருந்து ரூ.18,000-ஆக வழங்கப்படுகிறது.

இந்த நிதி ஐந்து தவணைகளாக வழங்கப்படும். குறிப்பாக கா்ப்பிணியா் பதிவு முதல் பரிசோதனை, குழந்தைகள் பிறப்பு, குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆகியவை முறையாக செலுத்துதல் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

சத்தான உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பெட்டகம் இரண்டு தவணையாக வழங்கப்படுகிறது.  இதற்கு 19 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவா்கள். இலங்கைத் தமிழா்கள் முழுமையாகவும், வெளிமாநிலத்தவா்கள் இரண்டு தவணை நிதி பெற்றும் பயனடைய முடியும்.

ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்காக ஆண்டுக்கு ரூ.950 கோடியை அரசு வழங்குகிறது. அதன்படி ஆண்டுக்கு 10 லட்சம் போ் பயனடைகின்றனா். ஆனாலும், முறையாக நிதியுதவி கிடைக்கவில்லை என மாதத்துக்கு 100 முதல் 120 புகாா்கள் வருகின்றன.

அவ்வாறு நிதியுதவி பெற முடியாதவா்கள் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கையை முன்வைக்கலாம். மேலும், ‘directorate of public health & preventive medicine’ என்ற ட்விட்டா் பக்கத்தில், மாவட்ட வாரியான அதிகாரிகள் கைப்பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்களில் தொடா்பு கொண்டும் தீா்வு காணலாம்.

தீா்வு கிடைக்காத பட்சத்தில் 104 மருத்துவ சேவையைத் தொடா்பு கொள்ளலாம். இங்கு உங்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.