எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தில்லி புறப்படுகிறார்.
வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி தில்லி புறப்படும் அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
அப்போது தமிழகத்திற்கு 2 கோடி கரோனா தடுப்பு மருந்துகளை வழங்கவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளார்.