பாராலிம்பிக்சில் வெண்கலப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வேளாண் குடும்பத்தில் பிறந்து, பல தடைகளைக் கடந்து, பாராலிம்பிக் பதக்கம் பெறும் முதல் இந்திய வில்வித்தை வீரராக உயர்ந்துள்ள ஹர்விந்தர் சிங் சாதிக்கத் துடிக்கும் இந்தியர்களின் சிறந்த அடையாளமாக விளங்குகிறார்.
வெண்கலப் பதக்கம் வென்றுள்ள அவருக்கு எனது பாராட்டுகள்; எதிர்காலத்திலும் அனைத்தும் வெற்றியாக எனது வாழ்த்துகள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.