சென்னை மற்றும் கோவையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இரு மாவட்டங்களில் நேற்று கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், இரு மாவட்டங்களிலும் இன்று குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று 197 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 185-ஆக குறைந்துள்ளது.
கோவையில் நேற்று 212 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 204-ஆக குறைந்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 105 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், தஞ்சாவூரில் 109 பேருக்கும், திருப்பூரில் 84 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.