திமுக ஆட்சி இனி நிரந்தரமாக வேண்டும்: முப்பெரும் விழாவில் ஸ்டாலின்

தமிழகத்தில் நிரந்தரமாக திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
திமுக ஆட்சி இனி நிரந்தரமாக வேண்டும்: முப்பெரும் விழாவில் ஸ்டாலின் உரை
திமுக ஆட்சி இனி நிரந்தரமாக வேண்டும்: முப்பெரும் விழாவில் ஸ்டாலின் உரை

தமிழகத்தில் நிரந்தரமாக திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அண்ணா அறிவாலயத்தில் சமூக இடைவெளியுடன் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கட்சிக்காக உழைத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,  கட்சிக்காக உழைத்தவர்களை பெருமைப்படுத்துவதற்காக அண்ணா பிறந்தநாளான இன்று முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் 6-வது முறையாக திமுக ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது எந்த பலனையும் எதிர்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது.

தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்க வேண்டும். திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட நாம் திமுகவுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் அளவிற்கு நாம் களப்பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com