திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார்வப்பூர்வ ஆங்கில இருவார இதழான ‘தி ரைசிங் சன்’ மீண்டும் வெளியிடப்படவுள்ளது.
திமுகவின் செய்திகளை பிற மாநிலத்தவர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இருவார இதழான ‘தி ரைசிங் சன்’ பல்வேறு காரணங்களால் 2 முறை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக, மீண்டும் தனது கட்சியின் ஆங்கில இதழை வெளியிடவுள்ளது.
இதற்கான துவக்க விழா வரும் செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘தி ரைசிங் சன்’ இதழை மீண்டும் வெளியிடுகிறார்.