தமிழகத்தில் புதிதாக 1,694 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 1,694 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,57,266 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,658 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 26,04,491 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 35,490 ஆக உயர்ந்துள்ளது.
1,55,245 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இன்றைய நிலவரப்படி 17,285 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்: