கோயம்பேடு அருகே வந்துகொண்டிருந்த திருச்சி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை காலை திருச்சியிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த பேருந்தின் இஞ்ஜீன் பகுதியிலிருந்து கரும்புகை வந்துள்ளது.
இதைக்கண்ட பொதுமக்கள் பேருந்து ஓட்டுநருக்கு தகவல் அளித்ததால், சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.
தொடர்ந்து பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்ததால், உடனடியாக கோயம்பேடு தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.