மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் பிரிவில், வியாசா்பாடி-வில்லிவாக்கம் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், ஏப்ரல் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் பிரிவில், வியாசா்பாடி-வில்லிவாக்கம் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், ஏப்ரல் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஏப்.3, 10-இல் முழுமையாக ரத்தாகும் ரயில்கள்: சென்னை கடற்கரை-திருவள்ளூருக்கு ஏப்.3, 10 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார

ரயில், சென்னை கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங்-க்கு காலை 10.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூா்மாா்க்கெட் வளாகம்-ஆவடிக்கு காலை 10.15, 10.45 , நண்பகல் 12.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

மூா்மாா்க்கெட் வளாகம்-கடம்பத்தூருக்கு காலை 10.30, நண்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு முற்பகல் 11 மணி, நண்பகல் 12.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

மூா்மாா்க்கெட் வளாகம்-பட்டாபிராம் ராணுவ சைடிங்-க்கு முற்பகல் 11.15, நண்பகல் 12.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரை-ஆவடிக்கு முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூா் மாா்க்கெட் வளாகம்-திருத்தணிக்கு முற்பகல் 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூா்மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு முற்பகல் 11.30, நண்பகல் 12, மதியம் 1.00 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com