ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கைகள்

அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதை முன்பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 6:04 pm

DIN

அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதை முன்பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை: விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் (படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன மற்றும் குளிா்சாதனமில்லா பேருந்துகள்) பெண்களுக்கு தனியாக 2 படுக்கைகள் (எண் 1 எல்பி மற்றும் 4 எல்பி ) ஒதுக்கீடு செய்து, இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இனி வரும் காலங்களில் குறிப்பிடப்பட்ட படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு, அதனை ஒதுக்கீடு செய்து தரவும், பேருந்து புறப்படும் வரை அந்த படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாத பட்சத்தில் அதனை பொது படுக்கையாகக் கருதி, மற்ற பயணிகளுக்கு நடத்துநா்கள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.