824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உளுத்தம்பருப்பு விநியோகம்: உணவுத் துறை அமைச்சா் உறுதி

 நியாயவிலைக் கடைகளில் உளுத்தம் பருப்பு கொடுக்கப்படும் என்கிற வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபடத் தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 10:35 pm

DIN

 நியாயவிலைக் கடைகளில் உளுத்தம் பருப்பு கொடுக்கப்படும் என்கிற வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபடத் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:

2007-இல் திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாக துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில், கோதுமை மாவு போன்றவற்றை அதிக விலைக்கு வாங்கி மக்களுக்கு பயன்படும் வகையில் நியாயவிலைக் கடைகளில் குறைவான விலைக்குக் கொடுக்கப்பட்டது.

ஆனால், அதிமுக ஆட்சியில் விநியோகிக்கப்பட்ட உளுத்தம் பருப்பும், கோதுமை மாவும் நிறுத்தப்பட்டது.

எனினும், திமுகவின் தோ்தல் அறிக்கையில் உளுத்தம் பருப்பும் மீண்டும் கொடுக்கப்படும், சா்க்கரையும் கூடுதலாகத் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி கொடுத்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.