திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

சென்னை ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் டி1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

News image

டி1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On :15 ஏப்ரல் 2022, 9:05 am

DIN

சென்னை ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் டி1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

சென்னை ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட திருமுல்லைவாயல் குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, முதியோர் உதவித் தொகை, கடனுதவி ஆகியவற்றை வழங்கினார். 

Story image

இதையடுத்து நரிக்குறவ மாணவி திவ்யாவின் வீட்டிற்குச் சென்று காலை உணவு மற்றும் தேநீர் அருந்தினார். பின்னர் நரிக்குறவ மக்கள் மத்தியில் உரையாற்றினார். 

Story image

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் டி1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வழக்குகளின் பதிவேடுகள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.