ஆற்காடு தனியார் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சாலையில் மூன்று அடுக்கு மாடியில் தனியார் ஜவுளிக் கடை ஒன்று உள்ளது. கடையை வியாழக்கிழமை இரவு வழக்கம்போல பூட்டிவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் பூட்டி விட்டுச்சென்ற சிறிது நேரத்தில் கடையின் கீழ்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீயை அணைத்தனர்.

மூன்று மாடிகளுக்கும் பரவிய தீயால், கடையில் இருந்த விலை உயர்ந்த துணிகள் உள்பட ஏராளமான பொருள்கள் எரிந்து நாசமாகின. சுமார் 7 மணி நேரம் போராடி அதிகாலையில் தீ அணைக்கப்பட்டது.
சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆற்காடு போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நியூசிலாந்து வீரர்களைப் பாராட்டிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர்!
தினப்பலன்கள் - கடகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 82 காசுகள் சரிந்து ரூ. 93.71ஆக நிறைவு!

சமூக சிக்கல்களுக்குள் சுழலும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்!
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

