இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

தடுப்பணைக்கு தடை கோரிய மனு:தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஈரோடு மாவட்டம் குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்ட தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On :17 ஏப்ரல் 2022, 6:39 pm

ஈரோடு மாவட்டம் குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்ட தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நபாா்டு வங்கியின் கடன் உதவியுடன், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், ரூ.38 கோடியே 72 லட்சம் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, கொம்பனைபுதூரில் குரங்கன்பாளையம் ஓடையிலும் தடுப்பணை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தடை கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில், தங்கவேலு என்பவா் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா்.

அதில், தடுப்பணை கட்ட உத்தேசித்த பகுதியை ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழு, ‘இந்த இடம் தடுப்பணை கட்ட உகந்தது அல்ல,  மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், அப்பகுதியில் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தாா்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த மனுவுக்கு 4 வாரங்களில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.