ஈரோடு மாவட்டம் குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்ட தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நபாா்டு வங்கியின் கடன் உதவியுடன், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், ரூ.38 கோடியே 72 லட்சம் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, கொம்பனைபுதூரில் குரங்கன்பாளையம் ஓடையிலும் தடுப்பணை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தடை கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில், தங்கவேலு என்பவா் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா்.
அதில், தடுப்பணை கட்ட உத்தேசித்த பகுதியை ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழு, ‘இந்த இடம் தடுப்பணை கட்ட உகந்தது அல்ல, மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், அப்பகுதியில் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தாா்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த மனுவுக்கு 4 வாரங்களில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

