வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா; 2 கார்கள் பறிமுதல்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா, 2 கார்களை பறிமுதல் செய்த  போலீஸார், இதுதொடர்பாக வழக்குரைஞர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

News image
வேதாரண்யத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள், கார்களை ஆய்வு செய்த எஸ்.பி. ஜவகர்.
Updated On :21 ஏப்ரல் 2022, 9:31 am

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா, 2 கார்களை பறிமுதல் செய்த  போலீஸார், இதுதொடர்பாக வழக்குரைஞர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

வேதாரண்யம் கடல் வழியாக புதன்கிழமை இரவு கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. நெய்விளக்கு பகுதியில் நடந்த வாகன சோதனையில் இலங்கைக்கு கடத்திக் கொண்டு செல்லப்பட்ட  147 கிலோ கஞ்சா, அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது,

சம்பவத்தில் ஈடுபட்ட கோவில்பத்து வழக்குரைஞர் சரபோஜி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, கார்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இன்று ஆய்வு செய்தார்.படம் :

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.