டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காவிரி பாசனப் பகுதியில் மெழுகு வண்டுகளை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்

பூலாம்பட்டி காவிரி பாசனப் பகுதியில், பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்த மெழுகு வண்டுகளை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு செயல் விளக்க பயிற்சி முகாம் பூலாம்பட்டியில் நடைபெற்றது. 

News image
மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திட​  விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளிக்கும் வேளாண் ஆராய்ச்சி குழுவினர்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:02 am

DIN


எடப்பாடி: பூலாம்பட்டி காவிரி பாசனப் பகுதியில், பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்த மெழுகு வண்டுகளை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு செயல் விளக்க பயிற்சி முகாம் பூலாம்பட்டியில் நடைபெற்றது. 

சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள, காவிரி பாசனப் பகுதிகளான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அதிக அளவிலான நிலப்பரப்பில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மரவள்ளி பயிர் செய்யப்பட்ட வயல்வெளிகளில், இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான மெழுகு வண்டுகள் ஆக்கிரமித்து மரவள்ளி பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த இயலாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

Story image

மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திடும் முறை குறித்து விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளித்த வேளாண் ஆராய்ச்சி குழுவினர்.

சேலம் மாவட்டம், சந்தியூர் பகுதியில் இயங்கிவரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட காவிரி வடிநில பகுதியில் உள்ள மரவள்ளி பயிர் செய்யப்பட்ட வயல்களில் முகாமிட்டு இரவு நேரங்களில் படையெடுத்து வரும் மெழுகு வண்டுகளை பெரிய அளவிலான மின் விளக்குகள் அமைத்தும், இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் மின் விளக்கு பொறி உள்ளிட்ட பல்வேறு வகையான சாதனங்கள் வாயிலாக மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திடும் முறை குறித்து விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளித்தனர். 

முகாமில் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ரவி, கிருஷ்ணவேணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அனுஷா, வேளாண் உதவி இயக்குநர் சுமதி உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். 

Story image

பெரிய அளவிலான மின் விளக்குகள் அமைத்து மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திட​  விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளிக்கும் வேளாண் ஆராய்ச்சி குழுவினர்.

பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் தொடர்ந்து 10 நாள்களுக்கு இம்முறையில் மெழுகு வண்டுகளின் தாக்குதலை கட்டுப்படுத்திடுமாறு அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.