சட்டம், சமூக நீதி, நீதிநெறிமுறைகள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை முறையாகப் பின்பற்றும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதியோடுதான், தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம். நாகரிக சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும், மறுமலா்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் அவா்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்கவும் சுதந்திரமாகச் செயல்படும் நீதித்துறை தேவை என்பதை நமது அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதன்படி, தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் விரைவில் நீதி கிடைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அரசு செய்து வருகிறது.