பெரம்பலூர்: சென்னையில் நிறுத்தப்பட்ட மினி பேருந்துகள் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறினார்.
பெரம்பலூரில் மருதையாறு தூர்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னையில் நிறுத்தப்பட்ட மினி பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்படும். சேவை தேவைப்படும் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு வருகிறது.
அரசுப் பேருந்துகளுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக துறைரீதியான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் மூலம் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க அரசு நிதி ஒதுக்கி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக நடத்துநர் பணிக்கான உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.