ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

கிராம சபைக் கூட்டத்தில் கேட்கப்பட்ட மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

News image

கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

Updated On :24 ஏப்ரல் 2022, 6:36 am

DIN


கிராம சபைக் கூட்டத்தில் கேட்கப்பட்ட மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செங்காடு ஊராட்சி பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து மேடையில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், 
600 கிராம ஊராட்சிகளில் இந்த ஆண்டு கிராம செயலகங்கள் உருவாக்கப்படும்.

அரசின் திட்டங்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீடித்த வளர்ச்சிப் பணிகளை உருவாக்க திட்டம் வகுத்துள்ளோம். 

செங்காடு, கண்டமங்கலம் பகுதிகளில் மக்கள் கோரிக்கை விடுத்த சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தரப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், நான் கொடுத்த உறுதி மொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா என மீண்டும் வந்து பார்வையிடுவேன் எனவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.