ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

களிமேடு கிராமத்தில் ஒரு நபர் குழு அலுவலர் விசாரணை தொடங்கியது

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தேர் மின் விபத்து தொடர்பாக ஒரு நபர் குழு விசாரணை அலுவலர் குமார் ஜெயந்த்  சனிக்கிழமை பிற்பகல் விசாரணையைத் தொடங்கினார்.

News image
களிமேடு கிராமத்தில் விபத்துக்குள்ளான தேரை பார்வையிட்டு விசாரணை நடத்துகிறார் ஒரு நபர் விசாரணைக் குழு அலுவலர் குமார் ஜெயந்த்.
Updated On :30 ஏப்ரல் 2022, 8:52 am

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தேர் மின் விபத்து தொடர்பாக ஒரு நபர் குழு விசாரணை அலுவலர் குமார் ஜெயந்த்  சனிக்கிழமை பிற்பகல் விசாரணையைத் தொடங்கினார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி அதிகாலை தேர் மின் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 17 மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Story image

களிமேடு கிராமத்தில் விபத்துக்குள்ளான தேரை பார்வையிட்ட ஒரு நபர் விசாரணைக் குழு அலுவலர் குமார் ஜெயந்த்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த் என்பவர் ஒரு நபரை விசாரணைக்கு அலுவலராக தமிழக அரசு நியமித்தது.

இதைத்தொடர்ந்து, களிமேடு கிராமத்தில் விபத்துக்குள்ளான தேரை ஒரு நபர் விசாரணைக் குழு அலுவலர் பார்வையிட்டார். மேலும் கிராம மக்களிடம் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். 

Story image

களிமேடு கிராம மக்களிடம் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த விவரங்களைக் கேட்டறியும் குமார் ஜெயந்த்.

பின்னர் செய்தியாளர்களிடம் அலுவலர் தெரிவித்தது:
களிமேடு கிராமத்தில் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் இருப்பேன்.  தகவல் தெரிவிக்க விரும்பும் மக்கள் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

இங்கு சேகரிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருப்பதற்கான ஆலோசனைகள் கொண்ட அறிக்கை தயாரிக்கப்படும். இதனால் அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்வதற்கு சில நாள்களாகும் என்றார் குமார் ஜெயந்த்.

Story image

களிமேடு கிராமத்தில் விபத்துக்குள்ளான தேரை பார்வையிடும்  விசாரணைக் குழு அலுவலர் குமார் ஜெயந்துடன் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

இந்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.