கருணாநிதி நினைவுநாள்: நீடாமங்கலத்தில் இரு அணிகளால் அமைதி ஊர்வலம்

நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதி ஊர்வலம் திமுகவின் இரு அணிகளால் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியாக நடத்தப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ.பி.ராசமாணிக்கம் தலைமையில் & திமுகவினர்  ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில்
முன்னாள் எம்.எல்.ஏ.பி.ராசமாணிக்கம் தலைமையில் & திமுகவினர் ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில்
Updated on
1 min read

நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதி ஊர்வலம் திமுகவின் இரு அணிகளால் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியாக நடத்தப்பட்டது.

நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியிலிருந்து திமுகவின் ஒரு அணியினர் முன்னாள் எம்.எல்.ஏ.பி.ராசமாணிக்கம் தலைமையில் ஊர்வலமாக சென்று கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியிலிருந்து திமுகவைச் சேர்ந்த மற்றொரு அணியினர் ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊர்வலமாக சென்று பெரியார் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com