தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உதகையில் வனவிலங்கு தாக்கியதில் 4 வயது குழந்தை பலி

நீலகிரி மாவட்டம் உதகை வடக்கு வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் வனவிலங்க தாக்கியதில் 4 வயது குழந்தை பலியானது.

News image
(கோப்பிலிருந்து)
Updated On :10 ஆகஸ்ட் 2022, 12:45 pm

DIN


உதகை: நீலகிரி மாவட்டம் உதகை வடக்கு வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் வனவிலங்க தாக்கியதில் 4 வயது குழந்தை பலியானது.

இன்று மதியம் சுமார் 12 மணியளவில் உதகை வடக்கு வனச்சரகம், தேனாடுகம்பை பிரிவு, ஒன்னதளை காவல் பகுதிக்கு உட்பட்ட அரக்காடு பகுதியில் உள்ள பாலன் என்பவரது தேயிலை தோட்டத்தில் குழந்தை ஒன்றை வனவிலங்கு தாக்கி இழுத்துச் சென்றதாக வனத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

வனத்துறையினர் உடனடியாக பணியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, நிஷாந்த் என்பவரது 4 வயது குழந்தை சரிதா, சுயநினைவின்றி கழுத்தில் இரத்த காயத்துடன் இருந்தது.

குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். 

பின்னர் சம்பவம் நடந்த இடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்ததில் அருகிலுள்ள சிறுத்தை (அ) புலியின் காலடி தடங்கள் இருந்ததால், அவைதான் குழந்தையை தாக்கி இருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. 

மேலும் அந்த குழந்தை இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு செல்லும் போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக குழந்தையின் தாயார் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.