சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கும்மிடிப்பூண்டியில் பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

கும்மிடிப்பூண்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி தமிழக கல்வித்துறை உத்தரவின் பேரில் ஏற்கப்பட்டது.

News image

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்வு.

Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:52 am

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி தமிழக கல்வித்துறை உத்தரவின் பேரில் ஏற்கப்பட்டது.

தமிழக அரசின் கல்வித் துறை ஆகஸ்ட் 12- 19 ஆம் தேதி வரை பள்ளிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் கொண்டாட அறிவுறுத்தியது.

Story image

போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி முன்மொழியும் பள்ளி மாணவர்கள்.

இதன்படி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

Story image

போதைப் பொருள் ஒழிப்பு குறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரை அடங்கிய படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஐயப்பன் வரவேற்றார். வட்டாட்சியர் கண்ணன், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், கிராம நிர்வாக அலுவலர் ஜோதிபிரகாஷ் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி முன்மொழிய அதை பள்ளி மாணவர்கள் 2000 பேரும் ஏற்றனர்.

அவ்வாறே ஆரம்பாக்கம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் பாதிரியார் கிரீத் மேத்யூஸ் தலைமையிலும் ஆரம்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் சிலம்பரன் முன்னிலையிலும் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.

Story image

ஆரம்பாக்கம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு.

நிகழ்வில் ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யனாரப்பன் பங்கேற்று மாணவர்களிடம் போதைப் பொருளின் தீய விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர் மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதி மொழியேற்றனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரை அடங்கிய படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.