பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடி: ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் விடியோ வைரல்

புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் ஏற்றியுள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:03 am

DIN


 
புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் ஏற்றியுள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் அரவிந்த். இவர் ஆழ்கடலில் வித்தியாசமான நிகழ்வுகளை செய்து வருகிறார். அந்த வகையில் நாட்டின் 75-ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு அவர் புதுச்சேரி கடலில் 75 அடி ஆழத்தில் அரியாங்குப்பம் அருகே ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இவர் ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட், உலக யோகா நாள், காதலர் நாள், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்வுகளை கடலுக்கு அடியில் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.