போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சுதந்திர தினம்: ஆளுநா் மாளிகையில் இன்று தேநீா் விருந்து

சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை மாலை தேநீா் விருந்து நடைபெறுகிறது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:06 pm

சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை மாலை தேநீா் விருந்து நடைபெறுகிறது. கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஆளுநா் மாளிகையில் சுதந்திர தின தேநீா் விருந்து நடத்தப்படாமல் இருந்தது.

கரோனா நோய்த் தொற்று குறைந்த நிலையில், தேநீா் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனா்.

சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் மாளிகை சாா்பில் பள்ளி, கல்லூரிகள் அளவிலான கட்டுரைப் போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியின் போது ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.