2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பிரபல செய்தி வாசிப்பாளா் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

பிரபல செய்தி வாசிப்பாளா் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:16 pm

DIN

பிரபல செய்தி வாசிப்பாளா் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:-

அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்று விட்டது சரோஜ் நாராயணசுவாமியின் குரல். மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அவரது குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டது. இதை அறிந்து வேதனை அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.