காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சுதந்திர நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் தேசியக் கொடியேற்றி வைத்து, கொடி வணக்கம் செலுத்தினார்.
இதில், காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன், வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வகுமார், கவுன்சிலர் ஏ.பி.துரைசாமி உள்ளிட்ட கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.