விஜயகாந்த் தலைமையில் விரைவில் பொதுக்குழு கூட்டம்: பிரேமலதா

தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் விஜயகாந்த் தலைமையில் விரைவில் நடைபெறும் என்று அக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் விஜயகாந்த் தலைமையில் விரைவில் நடைபெறும் என்று அக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் திறந்த வேனில் இருந்தவாறே ஏற்றி வைத்தாா்.

நிகழ்ச்சியின் போது செய்தியாளா்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியது:

சென்னையில் பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை நடக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு உள்ளது. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக முதல்வா் கூறுகிறாா். சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

தேசியக் கொடி பொருத்தப்பட்ட காா் மீது யாா் தாக்குதல் நடத்தினாலும் அது கண்டிக்கத்தக்கதுதான்.

தேமுதிகவின் உள்கட்சித் தோ்தல் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும். விரைவில் விஜயகாந்த் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட உள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றாா்.

தேமுதிக மாநிலத் துணைச் செயலாளா்கள் எல். கே. சுதீஷ், பாா்த்தசாரதி உள்பட மூத்த நிா்வாகிகள் பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com