பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி வருடாந்திர திருவிழா: போக்குவரத்து மாற்றம்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்திர திருவிழா 29-08-2022 அன்று தொடங்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, பெசன்ட் நகருக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 29-08-2022 அன்று மதியம் 12-00 மணி முதல் 21-00 மணி வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும்.

 திரு-வி-கா-பாலம், எஸ்.வி.படேல் சாலையில் இருந்து பெசன்ட் அவின்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்ல விரும்பும் வாகனங்கள்
ஆவின் பூங்காவில் இருந்து தடைசெய்யப்பட்டு, எல்.பி. சாலை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டு அவர்கள் இலக்கை அடையலாம்.
 7வது அவென்யூ மற்றும் எம்.ஜி.ரோடு சந்திப்பில் இருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
 M.L பூங்காவிலிருந்து MTC பேருந்துகள், பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. மேற்கண்ட
வாகனங்கள் ஆவின் பூங்கா, எல்.பி சாலை வழியாக, எம்.ஜி. சாலை, பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.
 பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கிச் செல்லும் MTC பேருந்துகள் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ
மற்றும் L.B. சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம். வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com