
கோப்புப் படம்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு. 08,09,2022 தேதி வியாழன்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது, மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் 17,09,2022 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.
இதையும் படிக்க- காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்கு அவிநாசியில் பாராட்டு விழா
ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான 08,09,2022 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு. சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.