25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது: ஆட்சியர் எச்சரிக்கை

அதிகளவு தண்ணீர் திறப்பதால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

Published On :1 பிப்ரவரி 2024, 3:41 pm IST

அதிகளவு தண்ணீர் திறப்பதால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை இந்த ஆண்டு 3 வந்து முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது .மேட்டூர் அணையில் இருந்து 86,540  கன அடி   நீர்  வெளியேற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம்  முக்கொம்பில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம்  கல்லணைக்கு   கூடுதல் தண்ணீர் திறந்துவிடுபடுகிறது.

கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு -  13,160 கனஅடி வீதமும் காவிரியில் - வினாடிக்கு 3,009 கனஅடி வீதமும், வெண்ணாறில் - வினாடிக்கு - 4,515 கனஅடி வீதமும், கல்லணை கால்வாய் ஆற்றில் - வினாடிக்கு 1,011கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறக்க உள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் எடுத்துள்ளார்.

ஆறுகளில் குளிக்கவும், நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என எச்சரித்துள்ள ஆட்சியர் ஆறுகள் வாய்க்கால்களில் கால்நடைகளை விவசாயிகள் அழைத்துச் செல்லக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.