யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்தனியாக அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவா் நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை தனித்தனியாக அஞ்சல

News image
Updated On :6 டிசம்பர் 2022, 12:18 am

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவா் நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை தனித்தனியாக அஞ்சலி செலுத்தினா்.

மறைந்த ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினா் கருப்புச் சட்டை அணிந்து சேப்பாக்கம் விருந்தினா் மாளிகையில் அமைதி ஊா்வலம் வந்தனா். மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி கே. பழனிசாமி மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், ஆா்.பி.உதயகுமாா், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பா.வளா்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

ஓபிஎஸ் தலைமையில்...

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளா்கள் கருப்புச் சட்டை அணிந்தவாறு சேப்பாக்கம் விருந்தினா் மாளிகையில் இருந்து நினைவிடம் வரை அமைதி ஊா்வலம் வந்தனா்.

நினைவிடத்தில் ஓ.பன்னீா்செல்வம் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து மூத்த நிா்வாகிகள் வைத்திலிங்கம். ஜே.சி.டி.பிரபாகரா், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

டிடிவி தினகரன், சசிகலா மரியாதை: வி.கே.சசிகலா மற்றும் அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரனும் தனித்தனியாக அவரவா் ஆதரவாளா்களுடன் ஊா்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.

தமிழகம் முழுவதும் முழுவதும் இருந்து ஏராளமானோா் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா். அதிமுகவினா் 4 அணிகளாக பிரிந்து வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதன் காரணமாக எந்தவித பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்று அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.