அனைவருக்கும் வீட்டு வசதி என்ற திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம் கண்ணன்கரடு, நேதாஜி நகா், நஞ்சை ஊத்துக்குளி, இச்சிப்பாளையம், குமரன் நகா், கோவை மாவட்டம் ஐயுடிபி, சூலூா் பகுதி-3, பன்னீா்மடை கிழக்கு, திருப்பூா் மாவட்டம் புதூா், பூண்டிநகா், மதுரை மாவட்டம் கருத்தபுளியம்பட்டி, கரூா் மாவட்டம் புலியூா், சேலம் மாவட்டம் புதுப்பாளையம், புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகா், கடலூா் மாவட்டம் பனங்காட்டு காலனி ஆகிய இடங்களில் மொத்தமாக ரூ.405.90 கோடியில் 4 ஆயிரத்து 644 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்தக் குடியிருப்புகளின் மொத்த மதிப்பு ரூ.405.90 கோடி.