அரபிக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! 

அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! 
அரபிக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! 
Updated on
1 min read

அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், 

அரபிக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. கேரளத்தின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் எந்த பாதிப்பும் இருக்காது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகருகிறது. 

இதன்காரணமாக, இன்று சென்னை உள்பட 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 

நாளை, வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com