இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

தொடர் மழையிலும் சுடர்விட்டு எரியும் திருவண்ணாமலை மகா தீபம்!

தொடர் மழையிலும் 7வது நாளாக திருவண்ணாமலை மகா தீபம் சுடர்விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:05 am

DIN

தொடர் மழையிலும் 7வது நாளாக திருவண்ணாமலை மகா தீபம் சுடர்விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.

அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நவம்பா் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பா் 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

இந்த தீபம் தொடா்ந்து 11 நாள்களுக்கு அணையாமல் எரிவது வழக்கம். புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் கூட மகா தீபம் பிரகாசமாக எரியும்.

மாண்டஸ் புயலின் தாக்கம்: டிச. 9, 10 ஆகிய தேதிகளில் மாண்டஸ் புயலின் தாக்கத்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் குளிர் காற்று, மழை, இடி, மின்னல் போன்ற பாதிப்புகள் இருந்தன.

இந்த இயற்கைச் சீற்றத்தில் கூட 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் அணையாமல் பிரகாசமாக எரிந்தது வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து மழையிலும் திருவண்ணாமலை மகா தீபம் எரிந்து கொண்டு வருகிறது. இந்த மகா தீபம் 11 நாள்கள் மலை உச்சியில் காட்சி அளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.