தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜல்லிக்கட்டு: மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விழாக் கமிட்டி

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரி முறைப்படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விழா கமிட்டியினர் இன்று மனு அளித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2022, 8:13 am

DIN

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரி முறைப்படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விழாக் கமிட்டியினர் இன்று மனு அளித்துள்ளனர்.

தமிழரின் பெருமைமிகு ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது மதுரையில் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. 

ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் முறையே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. 

இதையடுத்து அந்தந்த ஊரின் சார்பில் விழாவை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி விழாக் கமிட்டியினர் இன்று மனு அளித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.