திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து நான்காம் நாளான திங்கள்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் முத்து ஆண்டாள் கொண்டை அணிந்து செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா கடந்த வியாழக்கிழமை இரவு தொடங்கியது. முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
பகல்பத்து விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை ரத்தின நீள்முடி கீரிடம், ரத்தின அபயஹஸ்தம், கபாய் சட்டை, அடுக்குப் பதக்கம், காசு மாலை, நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திருவாபரணங்களுடன் அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா்.
பகல் பத்து நான்காம் நாளான திங்கள்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் முத்து ஆண்டாள் கொண்டை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.
இரண்டாவது நாளான சனிக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளினார்.
மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் சாய்வு சவுரி கொண்டை, ரத்தின அபயஹஸ்தம், ரத்தினகிளி, பவள மாலை, முத்துச்சரம் பஞ்சாயுத மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீ நம்பெருமாள் காட்சியளித்தார்.
அர்ச்சுன மண்டபத்தில் முத்து ஆண்டாள் கொண்டை அணிந்து நாச்சியார், தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.
பகல் பத்து நான்காம் நாளான திங்கள்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் முத்து ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம் , மகரி, சந்திர ஹாரம், வயிர 3 அடுக்கு மகர கண்டிகை, அடுக்கு பதக்கங்கள், வயிர அபயஹஸ்தத்துடன், செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, 2 வட பெரிய முத்து சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.
நான்காம் நாளான திங்கள்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்.
பகல்பத்தின் கடைசி நாளான ஜனவரி 1 ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா். அதனைத் தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.