திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து நாளைமுதல் (டிச.28) நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறுபடுகை மூன்றாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு 2022 டிசம்பர் 28 முதல் 2023 ஏப்ரல் 27 வரை 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிய இடைவெளிவிட்டு நான்கு சுற்றுகளாக மொத்தம் 7600 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.