மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக தற்போது சிறப்பு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் உரசினால் பெண்கள் பேருந்தில் உள்ள அவசர பொத்தானை அழுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் பயணம் செய்ய விரும்பும் பேருந்து எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது, அடுத்தப் பேருந்து எப்போது வரும் என்பதை அறிய 'சலோ' செயலி சமீபத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பெண்கள் பாதுகாப்புக்கான வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்கள், அலுவலகங்களுக்குச் செல்லும், பெண்களின் பாதுகாப்பு கருதி, சென்னையில் இயங்கும் சுமார் 1,200 மாநகரப் பேருந்துகளில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கள் தங்களை உரசினாலோ, பாலியல் தொல்லை கொடுத்தாலோ இந்த அவசர பொத்தானை அழுத்தலாம். அதன் மூலம் அந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும், பஸ்களிலும் மகளிர் பயணிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியுடன், மாநகர போக்குவரத்து கழகமும் இணைந்து நாளையும் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
போர்க் கூட்டணி? பாக். ராணுவத் தலைமைத் தளபதியுடன் சௌதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

லக்ஷ்மி பிராண்ட்டின் தீபாவளி பரிசு போட்டி : நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு லெக்ஸஸ் RX 350 கார் பரிசு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம்!

புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

